Sunday, September 25, 2005

ஜித்தன் (காதலியே)

Image hosting by Photobucket
பாடல் : காதலியே
படம் : ஜித்தன்
பாடகர் : கரிஷ் ராகவேந்திரா
இசை : சிறிகாந் தேவா


காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துனையோ?
இவளே கீர்த்தனையோ

பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ?
கண்ணும் கண்ணும் மோதுவதாலே காயமாகுமோ?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?

உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன் ஆயுள் ரேகையில்லையே
கனவு மட்டும் எனக்கு உண்டு.. கண்ணை காணவில்லையே..

கடற்கறை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால் தடம்
இந்த பாதம் எங்கை வைத்தேன் வந்து சொல்வாய் என்னிடம்..

ஒரு வீனையை கையில் கொடுத்து ஏன் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய்?
ஒரு காதல் நாடகம் நடத்தி அடி நீ ஏன் திரை விட்டு மறைந்தாய்?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

தூங்கும் போது கண்கள் இரண்டும் பார்வை கெட கூடுமோ?
தண்ணிர் மீது போகும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ?
இறந்து போன காதல் கவிதை இரவில் கூட்டம் போடுதோ?
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிரி குதித்து ஓடுதோ?
ஒரு சுகந்திரக் கிளியாய் பறந்தேன் என்னை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதலின் விடு முறை நாளோ?

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துனையோ?
இவளே கீர்த்தனையோ

கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன?
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்?

0 Comments:

Post a Comment

<< Home