Wednesday, June 29, 2005

உன்னோடு வாழாத வாழ்வென்ன

Image hosted by Photobucket.com

பாடல் : உன்னோடு வாழாத வாழ்வென்ன
பாடியவர் : சித்ரா
வரிகள் : வைரமுத்து

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதுபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றதுமண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவேநான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதுபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு
நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுதுநீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன் நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

மேகங்கள் என்னைத் தொட்டு

Image hosted by Photobucket.com



பாடல் : மேகங்கள் என்னைத் தொட்டு
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள் : வைரமுத்து

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டுசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம் அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டுசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டுசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சிஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணேநாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டுசில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டுமேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை

Thursday, June 23, 2005

சொந்தக் குரலில் (அமர்க்களம்)

Image hosted by Photobucket.com

பாடல் : சொந்தக் குரலில் பாட
பாடியவர் : ஷாலினி
வரிகள் : வைரமுத்து
படம் : அமர்க்களம்


தராரராரா தராரராரா தராரராரா தராரராரா ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை ஹெலோ சுஷீலா ஆண்டி ஹெலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டுச் சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள்

தராரராரா தராரராரா தராரராரா தராரராராம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...
தராரராரா ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை... தராரராரா

காற்றிலேறி பட்டுப் பாடப் போகிறேன் ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன் வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன் நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன் முன்னூறு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
தராரராரா தராரராரா ஹெய் ஹெய்
ஹெய் தராரராரா தராரராரா ஹெய் ஹெய்ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட..ச ச ச சம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை

ச சரா ச
சராசரார சரார சராரராரா சரார சரார சராரராரா
இந்த பூமி பழைய பூமி அல்வா ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டுவா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்வா ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டுவா அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அல்வா உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டுவா
அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அல்வா

தராரராரா தராரராரா தராரராரா தராரராரா
ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...
சொந்தக் குரலில் பாட...ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை...ரொம்ப நாளா ஆசை...
ஹெலோ சுஷீலா ஆண்டி ஹெலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டுச் சித்ராஎல்லோரும் என்னை மன்னியுங்கள்தராரராரா தராரராரா தராரராரா தராரராராதராரராரா தராரராரா தராரராரா தராரராராம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
அமர்க்களம்

Image hosted by Photobucket.com

பாடல் : சத்தம் இல்லாத தனிமை
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள் : வைரமுத்து

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன் பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன் புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன் நிலவில் நனையும் சோலைக் கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன் நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன் தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன் துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன் மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன் வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன் எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன் கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன் சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன் உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன் பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்கவிடாத செல்வம் கேட்டேன் மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன் பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன் மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன் புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன் இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன் துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன் தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன் சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன் மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன் தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் காசே வேண்டாம்
கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன் கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன் குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லைவாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்......